search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை ஊர்வலம்"

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
    • அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஈடுபட்ட இந்து முன்னனி கோட்ட பொறுப்பாளர் பழனிசாமி உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

    இதையடுத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக 30-க்கும் இந்து முன்னணியினர் வனவாசி, தானபதியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா தலைமையில் ஏராளமான போலீசார் வந்தனர். உரிய அனுமதி பெறாமல் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தக்கூடாது என போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஈடுபட்ட இந்து முன்னனி கோட்ட பொறுப்பாளர் பழனிசாமி உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
    • ஏரிகளில் கரைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை மற்றும் நாட்டறம்பள்ளி பகுதிகளில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

    விநாயகர் சதுர்த்தி விழா வையொட்டி ஜோலார்பேட்டை மற்றும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 31-ந் தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் சுமார் 3அடி முதல் 10 அடி வரை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    ஜோலார்பேட்டை பகுதியில் 48 சிலைகள் மற்றும் நாட்டறம்பள்ளி பகுதியில் 28 சிலைகள் சிலைகள் இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்துஅமைப்புகள், இளைஞர்கள் சார்பில் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.

    ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் கரசி தலைமையில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுகள் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்றனர்.

    நாட்டறம்பள்ளி பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் நாட்டறம்புள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், மற்றும் ஆயுதப்படை போலீசார் மற்றும் கமாண்டோ படை, பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர்கள், துப்பாக்கி ஏந்திய உள்ளூர் போலீசார் என 120 பேர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • போலீஸ் சூப்பிரண்டை இடமாற்றம் செய்ய வேண்டும்
    • இந்து முன்னனி கோரிக்கை

    கன்னியாகுமரி:

    தக்கலை ஒன்றியம் பத்மநாபபுரம் நகரம் இந்து முன்னணி சார்பில் 153 ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மண்டை க்காடு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

    முன்னதாக அனைத்து விநாயகர் சிலைகளும் வாக னங்களில் ஊர்வலமாக தக்கலை அருகே உள்ள வைகுண்ட புரம் ஸ்ரீ ராமர் ஆலய வளாகம் கொண்டு வரப்பட்டது. அப்போது வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டி பக்தி பாடல்கள் ஒலிக்கப்பட்டன.

    இதில் சில வேன்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்ப்பட்டுள்ளது. சங்கரன் காவு பகுதியில் இருந்து வந்த வாகனம் அழகிய மண்டபம் பகுதியில் வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வாகனத்தில் இருந்த ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கும் படி கூறினர்.

    இதனால் போலீசாருக்கும் வாகனத்தில் வந்த பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதன் பிறகு விநாயகர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு வைகுண்டபுரம் ராமர் கோவிலுக்கு வந்தது. அங்கு வந்ததும் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் சங்கரன் காவு பகுதியில் இருந்து வந்தவர்கள் போலீஸ் தடியடி குறித்து புகார் கூறினர்.

    மேலும் சம்பவத்தின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் அங்கு இருந்த தாகவும் அவரது உத்தரவின் பேரில் தான் தடியடி நடத்தப்பட்ட தாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

    இதற்கிடையில் தடியடி சம்பவத்திற்கு காரணமான போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத்தை இடம் மாற்ற செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதற்காக கண்டன போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

    தக்கலை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் இன்று மாலை இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் போராட்டத்தை எங்கு நடத்துவது, எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பு.
    • விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த மாதம் 31-ந்தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிலைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் இன்று 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

    விநாயகர் சிலைகள் புறப்படும் இடத்தில் இருந்து கடலில் கரைக்கப்படும் இடம் வரையில் போலீசார் உடன் சென்று பாதுகாப்பு அளிக்கின்றனர். விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்படும் வாகனத்துடன் போலீஸ் வாகனம் ஒன்றும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பாதைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதி, காசிமேடு, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை கடலோர பகுதி ஆகிய 4 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் 4 இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பெரிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏதுவாக 4 இடங்களிலும் ராட்சத கிரேன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. விநாயகர் சிலைகளை கரைக்கும்போது கடலில் யாராவது மூழ்கி விட்டால் அவரை காப்பாற்றுவதற்கு ஏதுவாக பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களும் தயாராக உள்ளனர்.

    • நாளை ஊர்வலம் நடக்கிறது
    • போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல அறிவுரை

    செய்யாறு:

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செய்யாறு நகரில் இந்து முன்னணி சார்பிலும் மற்றும் விநாயகர் கோவில்களில் விழா குழுவினர் சார்பிலும் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை நாளை (சனிக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் சென்று கோனேரியான் குளக்கரையில் கரைக்கப்படுகிறது.

    இதையொட்டி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் நேற்று இரவு 7 மணி அளவில் செய்யாறு நகரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லும் வழிப்பாதைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து மார்க்கெட்டில் அம்மா உணவகத்தில் அருகே விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரிடம் விநாயகர் சிலையை அமைதியான வழியில் யாருக்கும் எந்தவித தொந்தரவும் அளிக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், போலீசார் அனுமதித்த வழித்தடத்திலேயே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

    • தற்காலிக சாலைகள் அமைக்கும் பணி தீவிரம்
    • சதுப்பேரி ஏரியில் சிலைகள் கரைக்கப்படுகிறது

    வேலூர்:

    வேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நாளை நடக்கிறது. நாளை மதியம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்குகிறது.

    காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின் பஜார், லாங்கு பஜார், மூங்கில் மண்டி, அண்ணா கலையரங்கம் செல்கின்றன. அந்த இடத்தில் வேலூரில் இருந்து கொண்டு வரப்படும் சிலைகள் இணைகின்றன.

    பின்னர் கோட்டை சுற்றுசாலை கொணவட்டம் வழியாக சதுப்பேரி ஏரிக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டு அங்கு கரைக்கப்படுகின்றன.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் பாதைகளை மாநகராட்சி சார்பில் சீரமைத்து வருகின்றனர்.

    பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் பகுதிகளில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லும் வகையில் சாலைகள் அமைக்கும் பணிகள் இன்று நடந்தது.

    • போலீசாருக்கு பாதுகாப்பு பணி இடங்கள் ஒதுக்கி எஸ்.பி. பேட்டி
    • பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட உள்ளனர்

    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார், ஆயுதப்படை போலீசார் அதிவிரைவு படை மற்றும் கமாண்டோ படை போலீசாருக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடந்தது.

    பணியிடம் ஒதுக்கீடு

    இதையடுத்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.அப்போது அவர் கூறியதாவது, பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் சிலைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள சூழ்நிலை குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு போலீஸ்க்கு 3 விநாயகர் சிலை பாதுகாப்பு பணி வழங்க படலாம். எந்தவித அசம்பாவித பணிகளும் நடைபெறாமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். போலீசாருக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றார்.

    இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    30 மற்றும் 31-ந் தேதிகளில் விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 62 பேரிடம் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதையில் 1888 சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன மேலும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் 3 டிரோன் கேமராக்கள் மூலம் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்

    மொபைல் கமெண்ட் கண்ட்ரோல் யூனிட் ஒன்றும் கண்காணிப்பு பணியில் புதிதாக ஈடுபடுத்தப்பட உள்ளது என்றார்.

    • 2 வருடங்களுக்கு பிறகு சிலைகளை அமைத்து வழிபட அனுமதி
    • முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசாருக்கு அறிவுரை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் வேலூர் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சத்தியபிரியா ஆய்வு செய்தார். விநாயகர் சதுர்த்தி விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது.

    வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சிலைகள் அமைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு இருந்தது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    எனவே இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதல் உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி விநாயகர் சிலைகளை அமைக்க விரும்புவோர் முன்அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சிலைகளை அமைக்க வேண்டும் என்றும், அனுமதிக்கப்படும் வழிதடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளதாக இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் அருண்குமார் தெரிவித்தார். தொடர்ந்து வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் திருவண்ணாமலை காந்திசிலை அருகிலிருந்து இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன விழாவையொட்டி புறப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாமரை குளத்தில் நிறைவடையவுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றபோது இருதரப்பினர் கோஷ்டி மோதல் காரணத்தினால் கலவரம் ஏற்பட்டது.

    இதுபோன்று எந்தவித அசம்பவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சத்தியபிரியா திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசாருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    ×